இந்த கல்வி ஆண்டு முதல் (2024-25) LKG, UKG, 1,2 & 3 வகுப்புகளுக்கு CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த ஆண்டு முதல் அத்திக்கடை, பொதக்குடி, சேகரை மற்றும் சேந்தங்குடி வரை வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் 7667746872 / 9788863583 / 04367 232 666 / 235 666

சாதனைகள்

சாதனைகள்

சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு அனைத்து தனியார் பள்ளிகள் சங்க கூட்டத்தில் நமது தாளாளர்களுடன். மாண்புமிகு. இந்து அறநிலையத்துறை அமைச்சர். திரு. சேகர்பாபு அவர்களும். பாராளுமன்ற மேல் சபை உறுப்பினர் Dr. கனிமொழி சோமு அவர்களும் கலந்துக்கொண்டு கொரணா காலத்தில் Online வகுப்புகளை சிறப்பாக நடத்திய பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குகிறார்கள். அதில் நம் பள்ளி சார்பாக நமது பள்ளியின் தாளாளர் Dr.Al Ameen அவர்கள் விருது பெற

சாதனைகள்

அபாகஸ் போட்டி

கணிதம் சந்தோசத்தை கூட்டவோ, கவலையக் கழிக்கவோ நமக்கு கற்றுத் தருவதில்லை. ஆனால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் (கணக்கிற்கான ) தீர்வை காரணத்தோடு கற்றுக் கொடுக்கிறது. நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அபாகஸ் என்று சொல்லப்படும் முறையில் சொல்லி கொடுப்பதால் கணக்களை மிகுந்த ஆர்வத்துடனும், விரைவாகவும், எளிமையாகவும் போட்டுகிறார்கள்.

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையில் நடைப்பெற்ற போட்டிகளில் மிக சிறப்பாக பங்கேற்று பல பரிசுகளை பெற்று வந்தார்கள்.

தேசிய அளவில் நடைப்பெற்ற திறந்த வெளி போட்டி சென்னையில் நடைப்பெற்றதில் கலந்துக் கொண்டு ஐந்தாம் இடத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்கள்.

சாதனைகள்

கராத்தே சாம்பியன்

தற்காப்பு கலை கற்பதின் நோக்கம், எதிராளியை அழிப்பதற்காக அல்ல. மாறாக தன்னை அசாதாராண சூழ்நிலையில் தன்னை காத்துக் கொள்ள. எங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு பயம் இல்லாமல் அவர்கள் வாழவும், தேவைப்பட்டால் தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருவாரூரில் 5வது மாநில அளவிலான திறந்ந வெளி போட்டியில் எங்கள் மாணவர்கள் கலந்துக்கொண்டு மிக சிறப்பாக தங்கள் திறமைகளை நிருபித்துள்ளார்கள். கலந்துகொண்ட அனைவரும் வெற்றிப்பெற்று பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் பெற்று வந்தார்கள்.

சாதனைகள்

யோகா

ஆன்மீகம் இல்லால் கல்வி முழுமையாகாது. மனதை ஒருநிலைப்படுத்தாமல் கல்வி முழுமையாது. பயிற்சி இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்த இயலாது. அதற்கு யோகா மிக முக்கியம். எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து மனதை ஒருநிலைப்படுத்தி அதன்மூலம் சுய கட்டுப்பாடு மற்றும் தன் நம்பிக்கையை அடைய வைக்கிறோம். அதிலும் வெற்றியும் கண்டுள்ளோம்.

தேசிய அளவில் நடைப்பெற்ற போட்டியில் நம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நிறைமொழி என்ற மாணவி பங்கேற்று தங்க பதக்கம் பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.